ஆனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த வாலிபர் துறையூரல சேர்ந்த 21 வயதான வினோத் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அவருடன் ஏற்பட்ட தகராறு கோபத்தில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேக்கிறார்கள்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.