துறையூர் அருகே மணல் கடத்தல் இருவர் கைது

துறையூர் அருகே கீரம்பூர் செங்கச்சி குட்டையில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட மணப்பாறையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சிவப்பிரகாசம் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், 3 யூனிட் மணலுடன் கூடிய டிப்பர் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி