தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியாகின. இதில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் நான்காம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த சிறப்பான வெற்றிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை சால்வை அணிவித்து வாழ்த்தினார்.