துறையூர்: 278 வழக்குகள் சமரசமாக பேசி முடித்துவைப்பு

துறையூரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் ஆலோசனைப்படி இன்று துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான விஜயகார்த்திக் தலைமையில் துறையூர் சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரபு மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதா ராணி ஆகியோரின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது. சுமார் 350 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 278 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மற்றும் வங்கி வாராக்கடன்கள் 47 வழக்குகளும் முடிக்கப்பட்டது. தீர்வு மொத்த வழக்குகள் 325, தொகையாக ரூபாய் 1,31,93,704 தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி