அதன் பிறகு சண்முகசுந்தரம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து மீண்டும் கடந்த ஏழாம் தேதி சண்முகசுந்தரத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஒன்றரை ஆண்டு தண்டனையை குறைத்து 10 மாதம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நவல்பட்டு போலீசாருக்கு சண்முகசுந்தரம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியராஜ் தலைமையிலான போலீசார் அன்னவாசல், சத்திரம் கிராமத்தில் பதுங்கி இருந்த சண்முகசுந்தரத்தை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?