திருச்சி அருகே நீரில் மூழ்கி பலி

திருச்சி சமயபுரம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், புள்ளம்பாடி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீசார் ராஜ்குமாரின் உடலை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி