இசிஜி, ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், தொழுநோய் சிகிச்சை, பெண்கள் மருத்துவம், பல், கண், தோல் மருத்துவம், எலும்பு மருத்துவம், நீரழிவு நோய் சிகிச்சை, சித்தா மற்றும் யுனானி சிகிச்சைகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. முகாமில் 1086 பேர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் சுகாதார ஆய்வாளர் சூர்யா நன்றி கூறினார்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?