முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில், காஜா பேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில், மேலப்புத்தூர் அருகே உள்ள கெம்ஸ்டவுன் பகுதியில் உள்ள ‘அன்னை இல்லத்தில்’ பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இரவு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.