இந்நிலையில் புளியஞ்சோலை ஆற்றுக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பொழிந்து வருவதை அடுத்து கடந்த 13ஆம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் கடந்த நான்கு தினங்களாக புளியஞ்சோலை சுற்றுலா தளம் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தடை உத்தரவு தெரியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்