திருச்சி ஜெயில் பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், வீட்டில் பீரோவில் இருந்து பணம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (ஜனவரி 9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காந்தி சந்தை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.