திருச்சி: இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலி

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம் மகன் அஸ்வின். சம்பவம் நடந்த நேற்று (ஜூன் 6) திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி