முருகனின் உடல் சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் துண்டான நிலையில் கிடந்தது. தொழிலாளர்கள் சந்தேகம்: பணிமனை உள்பகுதியில் உள்ள ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்கு வரும் ரயில் என்ஜின்கள் மிகவும் மெதுவாகவே வரும். அவ்வாறிருக்க, முருகேசன் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்தால் ரயில் ஓட்டுநர் என்ஜினை நிறுத்தியிருக்க முடியும் அல்லது அவர் திடீரென குறுக்கே பாய்ந்திருந்தால் கூட, உடல் சிதைந்துதான் இறந்திருக்க கூடும்.
ஆனால் முருகனின் உடலின் ஒருபகுதி வெளியிலும் இடுப்புக்கு மேல்பகுதி தண்டவாளத்தின் நடுவிலும் உள்ள நிலையில் கிடந்தது தொடர்பாக தொழிலாளர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப் பதிந்து, முருகன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.