இருப்பினும் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் மேலும் ரூ. 7 லட்சம் பணம் தரும்படி சாமிநாதனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த சாமிநாதன், கல்லணை அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த இரு கடிதங்களில், தனது தற்கொலைக்கு இருவர் காரணம் என எழுதியிருந்தார்.
இந்நிலையில் சாமிநாதனின் இறப்புக்கு நீதி கேட்டும், கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும் அவரின் உறவினர்கள் சனிக்கிழமை நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் தர்னாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாமிநாதனின் உடலை வாங்க மறுத்து கல்லணை பிரிவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் போலீஸாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.