முன்னாள் எம்எல்ஏ சௌந்திரபாண்டியன், அமைச்சர் கே.என். நேரு தனக்கு கிடைத்த பொறுப்பை ஆணவத்துடன் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். திமுக தொண்டர்களின் கோபத்தையும் மக்களின் சாபத்தையும் சம்பாதித்து கொண்டதன் விளைவாக, திருச்சியில் திமுகவை பலி கொடுத்து விட்டதாகவும், இந்த தோல்விக்கு கே.என். நேரு மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும், தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் கருத்து என்றும் சௌந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.