இதையடுத்து வால்நட்ஸ் பாக்கெட்டை பார்த்தபோது, அதில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி, விலை என உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. இதற்கு நிவாரணம் கோரி வெள்ளைச்சாமி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். மனுவை திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர், செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, நியாயமற்ற வர்த்தகத்துக்காக மனுதாரருக்கு உணவுப் பொருள் வாங்கிய தொகை ரூ. 360-ம், உடல் உபாதை மற்றும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக சேலம் மற்றும் திருச்சியைச் சேர்ந்த அந்த நிறுவனம் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ரூ. 10 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆடி கூழ் திருவிழா: தமிழர்களின் பாரம்பரிய நோய் எதிர்ப்பு அறிவியல்