திருச்சி மூதாட்டி தீயில் கருகி சாவு

திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த 62 வயதான சீலா தேவி, கடந்த மாதம் 30 ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்டௌண்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி