திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே உள்ள அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுகளப்பூர் முத்தமிழ்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் குமார் கழக துண்டு அணிவித்து உறுப்பினர் படிவம் வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டார்.