மீதமுள்ள 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்திய கும்பலுடன் திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் இளையராஜாவும் ஒருவர். மற்றவர்கள் கார் ஓட்டுநர்கள் பிரபு, மகேஸ்வரன் மற்றும் ரயில்வே ஊழியர் பிரபு என்பது தெரியவந்தது. அவர்கள் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரர் இளையராஜாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார்.
டேபிள் டென்னிஸ்: சுலோவக்கியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி