மணப்பாறை அருகே கையும் களவுமாக சிக்கிய மூன்று பெண்கள்

துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவரிடம் செல்போன் மற்றும் பணத்தை திருட முயன்ற மூன்று பெண்கள் அப்பகுதி மக்களால் பிடிபட்டனர். தமிழரசி கூச்சலிட்டதால் பொதுமக்கள் அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி