மேலும் தொழிற்பயிற்சி தொடர்பாக படிப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றலாகி, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமையன்று அவரை, ஜெயிலர்கள் உள்ளிட்டோர் தாக்கியதாகவும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஹரிஹரசுதனின் பெற்றோர் கே.கே. நகர் போலீஸ் நிலையத்திலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு கைதி பேசிய ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது