திருச்சியில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் 7வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளுக்கு திருமணமான நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அவர் இறந்து விட்டார். இதனால் கடும் விரக்தியில் இருந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி