இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்றுக் கொண்டு கண்ணீருடன் தா. பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார். சமூக அறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவியின் உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் தேக்கிய சோகத்தை சுமந்து கொண்டு கைகளில் தேர்வுக்கு பேனா ஏந்தி வந்த மாணவி நிரஞ்சனாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர். மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும் தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி