திருச்சி மனைவி பிரிந்த வேதனை வாலிபர் தீக்குளித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் மணமேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், குடும்ப தகராறு காரணமாக பிரிந்து திருவானைக்கோவில் பகுதியில் வசித்து வந்த தனது மனைவியை, கடந்த இரண்டாம் தேதி தன்னுடன் மீண்டும் வாழ அழைத்துள்ளார். அவர் மறுத்ததால், ராஜேஷ் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி