திருச்சி: ஓடும் பேருந்தில் லேப்டாப் திருட்டு வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ராஜா, நேற்று முன்தினம் தஞ்சாவூர் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறினார். பேருந்து பால்பண்ணையை கடந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் அவரிடமிருந்து லேப்டாப்பை பறித்துச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அரியமங்கலம் போலீசார் உக்கடை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான வெட்டு வெங்கடேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி