தமிழகத்தில் 15 ஆண்டுகளாக வங்கி வணிக முகவர்களாக பணியாற்றி வருவோர், கொரோனா காலத்திலும் வங்கி சேவைகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அரசு நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். தற்போது தமிழக அரசு கமிஷன் தொகையை நிறுத்திவிட்டதால், கமிஷன் முறையை ரத்து செய்து அடிப்படை சம்பளம் வழங்கவும், நிலையான வருமானத்தை உறுதி செய்யவும் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.