சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஏர் கன் வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கல்லி அடைக்கம்பட்டியை சேர்ந்த சதாசிவம், ராமசாமி , மலைக்குடிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் ஆகியோர்களை தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் அன்றைய தினமே மேற்கண்ட சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் கிடைத்ததின் பெயரில், மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரணை செய்ய திருச்சி எஸ்பி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு
உத்தரவிட்டார். ச
ம்பந்தப்பட்ட காவலர்கள் மீது 3 பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார், உட்பட மூன்று காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.