திருவரங்கம் மேலூர் ரோடு நெடுந்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். (வயது 63) ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. இவர் எச். ஐ. வி. யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.இவரது மனைவிக்கு கேன்சர் நோய் உள்ளது. இவர் கேன்சர் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் விக்கிரமாதித்தன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மகன் திலீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.