திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட முருகானந்தம், கடந்த 24ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.