திருச்சி அரசு மருத்துவமனையில் காவலராக பணிபுரியும் சாந்தகுமாரி, கடந்த 12ஆம் தேதி பணியில் இருந்தபோது, மொபைல் திருட முயன்ற மர்மநபரை கையும் களவுமாக பிடித்தார். விசாரணையில், குழுமணி மேலத்தெருவை சேர்ந்த செந்தூர் முருகன் என தெரியவந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.