மணப்பாறை: இன்ஸ்டாவில் பழகி சிறுமியை கடத்திய வாலிபர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர், மணப்பாறை புத்தாநத்தம் அடுத்த மாங்கானபட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், புத்தாநத்தம் போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும், வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி