முசிறி அருகே கோதுர்பட்டி கிராமத்தில் கார்த்திகேயன் என்பவரின் நிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து நிர்வாக அலுவலர் சஞ்சீவி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஜம்புநாதபுரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.