மணப்பாறை அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மான்பஞ்சான்பட்டி கிராமத்தில் வசிக்கும் பழனிவேல் மனைவி அழகாம்பாள். இவரது மகள் நேற்று முன்தினம் மாலை தெத்தூரில் இருந்து பள்ளியை முடித்துவிட்டு மீண்டும் மான்பஞ்சான்பட்டிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னய்யா மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. 

அழகாம்பாள் கிண்டல் செய்தவர்களைக் கண்டித்துள்ளார். அவர்கள் இருவரும் அழகாம்மாளைத் தள்ளிவிட்டு தாக்கியதாக அழகம்மாள் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துவரங்குறிச்சி காவல்துறையினர் சின்னையா மற்றும் ஜெயராமன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி