இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஏவூர் சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் துணை சுகாதார நிலையத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக ஊராட்சி மன்றத் தலைவர் சிவஞானத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது சிலிண்டர் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜயா சிலிண்டர் காணாமல் போனதை உறுதி செய்து முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் துணை சுகாதார நிலையத்தில் சிலிண்டர் திருடியது ஏவூர் மேலதெரு ராமதாஸ் (35) மற்றும் அதே தெருவை சேர்ந்த பிரசாந்த் (24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருடு போன சிலிண்டர் மீட்கப்பட்டது. சிலிண்டர் திருடு போன சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.