இந்தநிலையில் சடலமாக கிடந்தவர் தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டி காலனி தெருவை சேர்ந்த வாழைஇலை அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரேஷ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷின் சடலத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தொட்டியத்தை சேர்ந்த டிரைவர் சிவஞானம் (35) என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்துபோன சுரேஷ் பெரியபள்ளிபாளையத்தை சேர்ந்த அறிவழகன் (48) என்பவரின் பைக்கை திருடியதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்து சுரேஷை தேடிக் கண்டுபிடித்து வயல்வெளிப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிவா (35), அறிவழகன் (48), பெரியபள்ளிபாளையம் செல்வராஜ் (58) மற்றும் ராஜேந்திரன் (55), சின்னபள்ளிபாளையத்தை சேர்ந்த குணசேகரன் (38) ஆகியோர் தென்னை மட்டைகொண்டு சரமாரியாக அடித்து கொன்றுள்ளனர். சடலத்தை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு 5 நபர்களும் தலைமறைவாகி உள்ளனர். இதையடுத்து ஐந்து பேரையும் தொட்டியம் போலீசார் கைது செய்தனர்