திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கவரப்பட்டியைச் சேர்ந்த (58) வயது விவசாயி கணேசன் இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றில் சடலமாக தூக்கிட்டு தொங்கியவாறு காணப்பட்டார். இதனை அப்பகுதி வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் விவசாயி கணேசன் சடலத்தை கீழே இறக்கி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன விவசாயி கணேசனுக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மேலும் போலீசார் கணேசன் ஏதேனும் பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து யாரேனும் மரத்தில் தொங்கவிட்டனரா? என பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி மர்மமான முறையில் இறந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.