இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. முன்னதாக காலை 10.30 மணி அளவில் கோவிலில் இருந்து உற்சவர் சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். 11 மணியளவில் தேரானது இழுக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் முடி காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?