முசிறி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வழங்கப்படாமல் உள்ள ஓய்வு பெற்றோர் பண பலன்கள் உடனடியாக வழங்க கோரியும், அகவிலைப்படி முழுமையாக வழங்க கோரியும், 2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க கோரியும், பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பலன்களை அன்றே வழங்க கோரியும் வலியுறுத்தினர்.