இந்த விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கங்கா தாரணி, மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் இந்த நூலகத்தில் எவ்வளவு நூல்கள் உள்ளன, எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், இளைஞர்கள் போட்டித் தேர்விற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனரா? எனக் கேட்டறிந்தார். விழாவில் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, வட்டாட்சியர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.