காலையில் எழுந்து பார்த்தபோழுது வீடு திறந்து கிடந்ததை கண்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஏழு பவுன் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அடுத்தடுத்து சுரேஷ் மற்றும் பரிமளம் ஆகியோரது வீடுகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீடுகளில் தடயங்களைச் சேகரித்தனர்.
ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை - நடிகை திரிதா சவுத்ரி