திருச்சி: ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சி மேலவாளாடியைச் சேர்ந்த அம்பிகா, சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை இழந்தார். தாளக்குடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் இடித்துவிட்டு இறங்கியதால் சந்தேகம் அடைந்த அவர், கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி