திருச்சியில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி

திருச்சி தென்னூர் பாரதிநகரை சேர்ந்தவர் பழனியம்மாள் மேலபுலிவார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலை கடக்க முயன்ற போது ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று பழனியம்மாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி