திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மொத்தம் 723 மனுக்கள் பெறப்பட்டன. கல்வி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரித்து உரிய தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.