திருச்சி இரு வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 மூதாட்டிகள் கைது

திருச்சியில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்ற இரண்டு மூதாட்டிகளை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். திருச்சி பஞ்சபூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்ற திருச்சி புங்கனூர் காந்திநகரை சேர்ந்த ரமணி 60 என்ற மூதாட்டியை கைது செய்தனர். இதேபோல் திருச்சி திண்டுக்கல் சாலை கோறையார் அருகே கஞ்சா விற்ற சந்துரு மனைவி யசோதா வயது 50 என்ற மூதாட்டியை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி