திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், எடமலைப்பட்டி புதூர் போலீசார் பவிதரன் (28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.