அவரது இந்த பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது மத்திய கல்வி அமைச்சர், திமுக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சரின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். மேலும், அவரது புகைப்படத்தை கிழித்து எறிந்தனர். இதில் திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!