மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து சக்திவேல் என்கிற ஆட்டோ சக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஜீயபுரம் போலீசார் திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் பரிந்துரை செய்தனர்.
இது தொடர்ந்து சக்திவேல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.