கோவிலுக்கு செல்வதற்காக சோமரசம்பேட்டை- கோப்பு மெயின் ரோட்டில் நுழைவு வாயில் வளைவு இருந்தது. அந்த நுழைவு வாயில் பழுதடைந்ததால் தற்போது அதன் அருகே புதிதாக நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் தூண்கள் அமைக்கப்பட்டு இன்று குறுக்கே கான்கிரீட் தூண் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திடீரென சாரம் சரிந்ததால் புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில் இருபுறத் தூண்கள் மற்றும் பீம் முற்றிலும் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் எவ்வித பாதிப்போ, உயிர் இழப்போ ஏற்படவில்லை. கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோவில் நுழைவாயில் சரிந்து விழுந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.