மணப்பாறை: தடுப்பூசி போட்ட 6 மாத குழந்தை உயிரிழப்பு

மணப்பாறை அருகே புத்தாநத்தம் பகுதியில் தடுப்பூசி போடப்பட்ட 6 மாத ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. எளமணத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் ஆண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி குளத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. மறுநாள் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புத்தாநத்தம் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி