திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் குமரப்பன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் நாதன் வயது 70. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை பொறுப்பாளர் மணிகண்டன் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி