திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 206 கட்டிடங்களில் சோலார் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. பஞ்சப்பூர் பகுதியில் தரை சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 2021 முதல் அக்டோபர் 2025 வரை 1.5 கோடி மின்சார யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மின்வாரிய கட்டணத்தில் சுமார் 7.3 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மாநகராட்சிக்கு கணிசமான நிதி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.